தந்தை-மகன் கொலை வழக்கு.. மேலும் 3 பேருக்கு சிபிஐ சம்மன்!

Published by
Surya

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சிறைக்கைதி, சிறை கண்காணிப்பாளர் உட்பட மேலும் 3 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

கோவில்பட்டி கிளைசிறையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு, சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளிகளான எஸ்.ஐ. ரகு கணேஷ், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே கோவில்பட்டி அரசு மருத்துவர்கள் வெங்கடேஷ் மற்றும் வெண்ணிலாவை ஆஜராக சம்மன் அளித்துள்ளது. அதன்படி, மருத்துவர் வெண்ணிலா, மனித உரிமைகள் ஆணையர்கள் முன்பு ஆஜரானார்.

இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் கோவில்பட்டி சிறைக்கைதி ராஜா சிங், சிறை கண்காணிப்பாளர் சங்கர், மருத்துவர் வினிலா ஆகிய மூன்று பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கோவில்பட்டி சிறைக்கு ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் அழைத்து வந்தபோது அவர்களின் உடலில் காயங்கள் இருந்ததாக கைதி ராஜாசிங் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, பிரண்ட்ஸ் ஆப் போலீசும் ஜெயராஜ் மற்றும் பென்னிஸ்-ஐ அடித்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

16 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

36 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

50 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

3 hours ago