தந்தை ,மகன் கொலை வழக்கு – 10 போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை

Default Image

சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை கொலை வழக்கில் சிறையில் உள்ள 10 காவலர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பி குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில்  சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கு முன் தந்தை மகன் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர்   கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது நிலையில்  5 போலீசாரை  சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.அதன்படி சிபிஐ  போலீசாரிடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கில் அடுத்த 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ  முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. .எஸ்.எஸ்.ஐ பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை காவலில் எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது  என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடந்தி வருகிறது.இந்நிலையில்  இந்த வழக்கில் சிறையில் உள்ள 10 காவலர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பி குமார் விசாரணை நடத்தி வருகிறார்.தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்