மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை !

Default Image

நெல்லையை சார்ந்த 45 வயது மதிப்புத்தக்க  மெக்கானிக் அவரின் மனைவியை பிரிந்து சென்று விட்டார்.இவர்களுக்கு 2 மகள்களும் , ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் 3 பேரும் தந்தையுடன் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி மெக்கானிக் வீட்டில் இருந்த தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக அந்த மெக்கானிக் வீட்டிற்கு சென்ற சிறுமியை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில்தன் தந்தை தன்னை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில்அப்போது இருந்த இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார். இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி இந்திராணி வழக்கை விசாரித்து மெக்கானிக்கிற்கு  ஒரு லட்சம் அபராதமும் , ஆயுள் தண்டனையும் கொடுத்து  தீர்ப்பளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பாக இரண்டு லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Sanju Samson
DMK MP A Rasa Speak about Waqf Act 2025
CM MK Stalin writes to PM Modi
Union minister Kiran Rijiju
Yashasvi Jaiswal
Encounter tn