திருமங்கலம்: விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாயில் தாலுகா அளவில் நடைபெறுகிறது. அதன்படி திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் முகாமிற்கு மண்டல துணை வட்டாட்சியர் அழகர்சாமி தலைமை வகித்தார். வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள், ‘‘சிப்காட் அமைவதாக கூறிய சிவரக்கோட்டை பகுதியில் அதிகாரிகள் சிலர் இடம் வாங்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் சிப்காட் திட்டத்தினை கொண்டு வருவார்களோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. சிப்காட்டிற்கு வைகை அணையில் இருந்து 40 லட்சம் தண்ணீர் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதனால் மதுரை, தேனி மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும். எனவே இதனை தடுக்க வேண்டும். திருமங்கலம் தாலுகா வனப்பகுதியில் மான், முயல், காட்டுப்பன்றி வேட்டை அதிகரித்துள்ளது. வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட மனுக்களை அளித்தனர்.
முன்னதாக கூட்டத்தில் சிவரக்கோட்டை, நேசனேரி, ஆலம்பட்டி, சாமிமல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 1 விவசாயி வீதம் 4 விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கு போதிய முன்னறிவிப்பு இல்லாததே காரணம் என கூறப்படுகிறது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…