புதிய வேளாண்சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லையெனவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் மட்டுமே போராடுகின்றனர் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைபெறும் கூட்டத்தில் சுற்றுசூழல் மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்களில் இருக்கும் நன்மைகள் குறித்து அவர் விளக்கமளித்தார். அதுகுறித்து பேசிய அவர், தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு விலையை நிர்ணயிக்க முடியாத நிலையில் விவசாயிகள் இருந்ததாகவும், தமிழகம், கர்நாடகா, குஜராத் உட்பட பல மாநிலங்களில் விவசாயிகள் போராடவில்லை என கூறினார்.
மேலும் பேசிய அவர், புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் எனவும் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் மட்டுமே போராடுவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், வேளாண் சட்டங்கள் மூலம் அதிக பலன்பெறுவது பஞ்சாப் மாநில விவசாயிகளே எனவும் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட கலந்துகொண்டார்.
அதுமட்டுமின்றி, இந்த கூட்டத்தில் மத்திய அரசு PM Kisan என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு ரூ.6,000 அதாவது, 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2,500 வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் இருக்கும் 9,000 கோடி விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ருபாய் வழங்கப்படும் என்றும், அந்த தொகை வந்துவிட்டால் பயனர்களின் மொபைல் எண்ணிற்கு குறுந்செய்தி ஒன்று வரும் எனவும், இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…