கயத்தாறு அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை.!

Default Image

கயத்தாறு அருகே குடும்ப தகராறில் விவசாயி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே வடக்கு கூட்டு பண்ணை சேர்ந்தவர் ராமமூர்த்தி 60 வயதான இவர் விவசாயி , இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும் 3 மகள்களும் 1மகனும் உள்ளனர், இந்நிலையில் ராமமூர்த்தி தினமும் குடித்து விட்டு வந்து மனைவி கிருஷ்ணவேணி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போடுவார், அதைபோல் நேற்று முன்தினம் மாலை குடித்து விட்டு வந்து வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் அவருடைய மனைவி கிருஷ்ணவேணி கோபப்பட்டு தனது மகள் வீட்டுக்குச் சென்று விட்டார் இந்த நிலையில் ராமமூர்த்தி நேற்று அதிகாலை மன உளைச்சல் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் , இதுபற்றி தகவல் அறிந்த கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் விரைந்து சென்று ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் , மேலும் இது பற்றி வழக்குப்பதிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்