விவசாயிகளின் அரைநிர்வாண போராட்டம் தேவையற்றது…! தமிழக பாஜக தலைவர் தமிழிசை

Default Image

விவசாயிகளின் அரைநிர்வாண போராட்டம் தேவையற்றது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் கண்துடைப்பு நாடகம் ஆகும்.மேகதாது அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்ய மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றம் சாட்டுகின்றனர்.விவசாயிகளின் அரைநிர்வாண போராட்டம் தேவையற்றது, மோடி ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்பாக உள்ளனர் .விவசாயிகள் கோரிக்கை நியாயமாக பரிசீலிக்கப்படுகிறது.விவசாயிகள் மீது அக்கறை உள்ள அரசாக பாஜக உள்ளது.காவிரி விவகாரத்தை மத்திய அரசுதான் முடிவுக்கு கொண்டு வந்தது என்றும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்