விவசாயி உயிரிழந்த வழக்கு.. சிபிசிஐடி விசாரிக்ககோரிய வழக்கு ஒத்திவைப்பு!

Default Image

தென்காசியில் வனத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த முத்துவின் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்ககோரிய வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

தென்காசி மாவட்டம், ராவணசமுத்திரத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. இவர் தந்து விளைநிலத்தில் அரசின் விதிகளை மீறி, மின் வேலிகளை அமைத்த நிலையில், கடையம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்தனர். அதன்படி, அவரும் ஆஜராகினார்.

அப்பொழுது அவர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவரை கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம் சாற்றினார்கள்.

இந்த வழக்கை மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்தநிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்ககோரி உயிரிழந்த முதியவர் முத்துவின் மனைவி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உயிரிழந்த முதியவரின் மருத்துவ ஆய்வு விபரங்கள் கிடைத்துள்ளதால், இந்த வழக்கை ஒத்திவைக்க அரசு தரப்பில் கோரியுள்ளது. அதன்படி, சிபிசிஐடி போலீசார் விசாரிக்ககோரிய வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்