இன்று முதல் அம்மா உணவகங்களில் கட்டணம்!

Published by
லீனா

இன்று முதல் அம்மா உணவகங்களில் கட்டணம். கால நீட்டிப்பு கேட்டு பொதுமக்கள் வேண்டுகோள்.

கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அனைத்து உணவகங்கள் மற்றும் மக்கள் கூடும் வணிக  வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த மாதம் ஏப்ரல்-14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதன்பின் மே-3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டது. இந்த சமயத்தில் தமிழகம் முழுவதும், ஏழை, எளிய மக்கள் வயிறார உண்பதற்காக, அம்மா உணவகம் மூலம் அரசியல் பிரமுகர்களும், தன்னார்வலர்களும் இலவசமாக உணவளித்து வந்தனர். 

இதையடுத்து, 3 வேளையும் அம்மா உணவகங்களில் இலவச சாப்பாடு வழங்கப்படும் என்றும், அதற்குறிய தொகையை சம்பந்தப்பட்ட தன்னார்வலர்களிடம் இருந்து வசூலித்து வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் அம்மா உணவக ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், விதிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததையடுத்து, அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கும் முறை கைவிடப்படுகிறது. எனவே, இன்று முதல் அம்மா உணவகங்களில் பொதுமக்கள் கட்டணம் செலுத்தி தான் சாப்பிட முடியும். இதுகுறித்து அந்தந்த மண்டல பொறுப்பாளர்கள், அம்மா உணவக ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலைமை சீரடையும் வரையிலோ அல்லது ஒரு மாதத்துக்காவது இலவசமாக உணவு வழங்கினால் நன்றாக இருக்கும் என்றும், இதன்மூலம் ஏழை, எளிய மக்கள் யாரிடமும் கையேந்தாமல் அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிட்டு செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். 

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

6 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

12 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

12 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

12 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

12 hours ago