6 மாத கருவை கலைக்க மனைவிக்கு விஷம் கொடுத்த ராணுவ வீரர் குடும்பம் -பெண்ணும் உயிரிழந்த சோகம்!

6 மாத கருவை கலைக்க மனைவிக்கு விஷம் கொடுத்த ராணுவ வீரர் குடும்பத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை என்னும் பகுதிக்கு அடுத்த வக்கணம்பட்டி சேர்ந்த சிவா என்பவரின் மகள் சத்தியவதனா என்பவருக்கும், ஆண்டியப்பனூரை சேர்ந்த ராணுவ வீரரான மணிவண்ணன் என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றுள்ளது. ராணுவ வீரராக பஞ்சாபில் பணிபுரிந்து வந்த மணிவண்ணன் தனது மனைவியையும் பஞ்சாப்புக்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது சொந்த ஊருக்கு மனைவியை அழைத்து வந்த மணிவண்ணன், தனது தாய் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து மனைவியின் கருவை கலைக்க முடிவு எடுத்து அவருக்கு விஷம் கொடுத்துள்ளார். இந்நிலையில் அதனை குடித்த பின் அவரது மனைவிக்கு கரு கலைந்த நிலையில் உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின் மருத்துவமனையில் அவரது மனைவியை அனுமதித்து சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர். ஆனால் ஆறு மாத கரு கலைந்த நிலையில் பெண்ணின் உடல் மிகவும் பாதிப்படைந்துள்ளது, சத்தியவதனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் மணிவண்ணன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில் சத்யவதனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தப்பியோடிய மணிவண்ணனை தற்பொழுது பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் திட்டமிட்டுதான் கொலை செய்ததாகவும், கருகலைப்பு மட்டுமல்ல இது இரட்டை கொலை எனவும் அவரது உறவினர் மற்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் மணிவண்ணனுக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்ய வேண்டும் எனவும் தற்பொழுது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025