திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு,தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், துளி போன்ற இந்த ஓராண்டு காலத்தில் கடல் போன்ற சாதனைகளை செய்துள்ளோம் என்ற பெருமிதத்துடன் தான் மாமன்றத்தில் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர், 5 முக்கிய திட்டங்களை அறிவித்தார்.அதன்படி,
இதனையடுத்து,முதல்வரின் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில்,திமுக அரசின் ஓராண்டு சாதனை என்பது பொய்யான விளம்பரம் என்றும் அதிமுகவின் திட்டங்களை தான் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார் எனவும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டது என்றும் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,செய்தியாளர் சந்திப்பில் ஈபிஎஸ் கூறியதாவது:
“திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஒரு பொய்யான விளம்பரத்தை முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.திமுக ஆட்சி அமைத்த இந்த ஓராண்டு காலத்தில் சட்டம் ஒழுங்க முழுமையாக கெட்டு விட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் முடிவுற்ற நிலையில் அந்த முடிவுற்ற பணியைத்தான் முதல்வர் இன்று திறப்பு விழாவாக காண்கிறார்.மேலும்,அம்மா அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு தான் முதல்வர் அடிக்கல் நாட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்த ஓராண்டுகால திமுக ஆட்சியில் எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை,நடைமுறைபடுத்தப்படவில்லை.ஆனால்,அம்மா ஆட்சியில் இருந்த போதும்,மறைந்த போதும் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.இதனால் அதிக அளவில் மக்களும் பயன் பெற்றார்கள்”,என்று தெரிவித்தார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…