குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற போலி சாமியார் கைது.!

Published by
பால முருகன்

நெல்லை மாவட்டம் கடையமான் குளத்தில் வசித்து வந்தவர் 70 வயது மூதாட்டி பார்வதி, மேலும் டோன்வூரை சேர்ந்தவர் சாமியார் ராஜன், இந்நிலையில் ராஜன் பார்வதியிடம் உங்கள் வீட்டில் கோடிக் கணக்கான தங்க புதையல்கள் உள்ளது, அந்த புதையலை எடுக்க வேண்டும் என்றால் சில பூஜைகள் செய்யவேண்டும் என்று பார்வதியிடம் சாமியார் ராஜன் ஆசையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ராஜன் தங்க புதையலை எடுக்க கிட்ட தட்ட 2 லட்சம் பணம் வங்கியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் தங்க புதயலை எடுப்பதற்காக நேற்று இரவு பூஜைக்காக கருப்பு பூனை, மற்றும் கோழி பலி கொடுக்க வேண்டும் என்று பார்வதியின் மகன் குமரேஷன் என்பவரிடம் கூறியுள்ளார்.

மேலும் தங்க புதையலுக்கு ஆசைப்பட்டு சாமியார் ராஜன் பேச்சை கேட்டு கருப்பு பூனை மற்றும் கோழியை குமரேஷன் கொடுவந்து சாமியார் ராஜனிடம் ஒப்படைத்துள்ளார், மேலும் பூஜை தொடங்கியதும் அங்கிருந்த கருப்பு பூனை மற்றும் கோழி இரன்டும் தப்பி சென்றுவிட்டது.

இந்நிலையில் இதனால் சாமியார் ராஜன் இதற்கு பதிலாக உனது மூத்தமகன் அல்லது இளைய மகன் இருவரில் யாரையாவது நரபலி கொடுத்துவிடு, அப்போதுதான் அந்த புதையல் கிடைக்கும் என்று கூறியுள்ளார், அப்பொழுது குமரேஷன் மது போதையில் இருந்துள்ளார்.

மேலும் இதனால் பதற்றமடைந்த குமரேஷன் மனைவி எனது குழந்தைகளை நரபலி கொடுக்க அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார், உடனடியாக சாமியார் குழந்தையை பிடித்து இழுத்துள்ளார், இதனால் குமரேஷன் மனைவி வேகமாக குழந்தையை தூக்கிக்கொண்டு அக்கம் பக்கத்தினருக்கு குரல் கொடுத்துள்ளார்.

அவர் குரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு இந்த தகவலை கூறினார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போலி சாமியார் ராஜனை கைது செய்தனர். மேலும் பார்வதி குமரேஷன் ஆகிய இரண்டு பேரிடமும் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago