போலி இ-மெயில் விவகாரத்தில் பெயர் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் செய்தி தொலைக்காட்சி பெரியாரியச் சித்தாந்த அமைப்புகளால் இயக்கப்படுகிறது என்று வீடியோ வெளியிட்டு, இது தொடர்பான குற்றச்சாட்டை மக்களும் சேர்ந்து அந்த தனியார் தொலைக்காட்சி குழுமத்தலைமைக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் என்று மாரிதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் தான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு தனியார் தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி பதிலளித்திருக்கிறார் என்று மாரிதாஸ் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மின்னஞ்சல் பொய்யானது என்று வினய் சாரவாகி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், மோசடி மெயில் விவகாரம் தொடர்பாக வினய் சராவகி அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
அந்த முதல் தகவல் அறிக்கையில், மோசடி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது, போலி ஆவணங்கள், போலிச்செய்திகளை பரப்புவது ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
கொல்கத்தா : 18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இன்றயை முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிகாக மாறியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும் என பினராயி விஜயன்…