தூத்துக்குடியில் போலி கிருமி நாசினி தயாரிப்பு! இருவர் கைது!

Default Image

கடந்த சில மாதங்களாக சீனாவில் பரவி வந்த உயிர்கொல்லி வைரஸான கொரோனா, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இது சீனாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது. 

இதனால், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, கை கழுவுதல்  செல்லும் போது, முக கவசம் அணிந்து செல்லுதல் போன்றவற்றை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கிருமி நாசினிகள் மற்றும் முக கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. 

இந்நிலையில், தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் போலி கிருமிநாசினிகள் தயாரிக்கப்படுவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கிருமி நாசினி தயாரித்த ஞான கிஷோர் ராஜ் மற்றும் ஜான் பெனடிக்ட் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து கலப்படம் செய்ய வைத்திருந்த 500 லிட்டர் எண்ணெய்யும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்