சேலத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ். இவர் ஏரிகளை சீரமைப்பது போன்ற பொது பணிகளை செய்து வரும் போது ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ மூலம் பேசுவார். மத்திய அரசின் 8 வழிச்சாலை , ஹைட்ரோகார்பன் , உள்ளிட்ட திட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிடுவார்.
இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அவரிடம் சில கேள்விகளை எழுப்பினார். அப்போது பியூஸ் மனுஷ் ஃபேஸ்புக் லைவ் வீடியோ போட்டு இருந்தார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பாஜக அலுவலகத்தில் இருந்தவர்கள் பியூஸ் மனுஷ் அலுவலகத்தை விட்டு போகுமாறு கூறினார்.
பின்னர் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பியூஸ் மனுஷ் செல்போன் கீழே விழுந்தது இதனால் ஃபேஸ்புக் லைவ் நின்றது. இதற்கிடையில் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்து காவல்துறை பியூஸ் மனுஷ் மீட்டு அழைத்து சென்றனர்.
காவல்துறையினர் அழைத்து செல்லும் போது போலீஸ் முன்பாக பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில் , தனது சுய விளம்பரத்திற்காக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை செய்ததாக குற்றம் சாட்டினர்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…