சேலத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ். இவர் ஏரிகளை சீரமைப்பது போன்ற பொது பணிகளை செய்து வரும் போது ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ மூலம் பேசுவார். மத்திய அரசின் 8 வழிச்சாலை , ஹைட்ரோகார்பன் , உள்ளிட்ட திட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிடுவார்.
இந்நிலையில் இன்று சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அவரிடம் சில கேள்விகளை எழுப்பினார். அப்போது பியூஸ் மனுஷ் ஃபேஸ்புக் லைவ் வீடியோ போட்டு இருந்தார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பாஜக அலுவலகத்தில் இருந்தவர்கள் பியூஸ் மனுஷ் அலுவலகத்தை விட்டு போகுமாறு கூறினார்.
பின்னர் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பியூஸ் மனுஷ் செல்போன் கீழே விழுந்தது இதனால் ஃபேஸ்புக் லைவ் நின்றது. இதற்கிடையில் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்து காவல்துறை பியூஸ் மனுஷ் மீட்டு அழைத்து சென்றனர்.
காவல்துறையினர் அழைத்து செல்லும் போது போலீஸ் முன்பாக பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில் , தனது சுய விளம்பரத்திற்காக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை செய்ததாக குற்றம் சாட்டினர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…