நியாய விலைக்கடை: தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் அதே கடைகளில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது!

Default Image

நியாய விலைக்கடைகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் அதே கடைகளில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், சில நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களைத் தவிர இதர வெளி நபர்கள் கடையில் இருப்பதாகவும், இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனைத் தவிர்க்கும் விதமாக கூட்டுறவுத்துறை அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, நியாய விலைக்கடை பணியாளர்களை ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. 3 ஆண்டுக்கு மேலாக ஏதேனும் பணியாளர் ஒரே கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தால் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

நியாய விலைக்கடைகளில் சம்மந்தப்பட்ட பணியாளர்களை தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது. அவ்வாறு வெளிநபர்கள் நியாய விலைக்கடைகளில் இருந்தால், இதுகுறித்து காவல் துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வெளிநபர்கள் கடையில் அனுமதித்து, அவர்களுக்கு துணைபோகும் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மீதும் மேற்குறிப்பிட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்