பெண் குழந்தைகளை பாதுகாக்கத் தவறிய சமூகம் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் ட்வீட்.
சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் பாதுகாப்பான இடம் “கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே” என்று என உருக்கமாக எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னையை அடுத்த மாங்காட்டில் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
அந்த மாணவி எழுதி வைத்துள்ள கடிதத்தில் கூறியுள்ள கருத்துகள் சமூகத்தின் மனசாட்சியையும் குத்திக் கிழிக்கின்றன. கோவை, கரூர், சென்னை என பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதைத் தடுக்க அரசு என்ன தான் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
பெண் குழந்தைகளை பாதுகாக்கத் தவறிய சமூகம் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உட்பட எந்த பெண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகக்கூடாது. தற்கொலைகள் கூடாது என்ற நிலையை உருவாக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…