மின் அளவீட்டை புகைப்படமெடுத்து தொழிற்சாலைகள் அனுப்பலாம்.!

Default Image

மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் அளவை தொழிற்சாலைகள் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தாழ்வழுந்த தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் தங்களது மின் இணைப்பின் மின் அளவீட்டை அனுப்பலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தாழ்வழுந்த (LT/LTCT) ஆலை, வணிக நிறுவனங்களுக்கு மின் உற்பத்தி பகிர்மான கழகம் வேண்டுகோள் விடுட்டுள்ளது. மின் அளவீட்டினை எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், இ-மெயில் மூலம் எழுத்து மற்றும் பகைப்படமெடுத்து அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது. பின்னர் தங்களது மின் இணைப்பு சார்ந்த பிரிவு அலுவலகத்தின் உதவி, இளநிலை பொறியாளர்களுக்கு அனுப்பலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் http://WWW.tangedco.gov.in என்ற இணையதளம் மூலம் உதவி பொறியாளர் அலுவக கைபேசி, இ-மெயில் விவரத்தை அறியலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரியில் செலுத்திய மின்கட்டண தொகையை மார்ச், ஏப்ரலுக்கு செலுத்தலாம் என முன்பு கூறப்பட்டது. முந்தைய மாத கட்டணத்தை செலுத்துவது தற்போதைய மின்நுகர்வு அடிப்படையில் கட்டணம் கூடுதலாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் புகாரை தொடர்ந்து தமிழ்நாடு மின்சாரவாரியம் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
Pollachi Sexual Assault case
edappadi palanisamy rs bharathi
Supreme court - Senthil Balaji
suryakumar yadav vk orange cap
Omar Abdullah About Pahalgam Attack
selvaperunthagai