ஆங்கிலேயர்களை தனியாகவே எதிர்த்து வெற்றி பெற்ற சாதனை வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளில் அவரது உருவப்படத்துக்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள பச்சேரி பகுதியில் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு இல்லம் உள்ளது. இன்று அவரது நினைவு நாளை முன்னிட்டு அவரது வாரிசுதாரர்கள் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒண்டிவீரன் நினைவு நாளில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆங்கிலேயர்களை தனியாகவே எதிர்த்து வெற்றி பெற்ற சாதனை வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் இன்று! வீரவணக்கம்! பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கிய அவ்வீரனுக்கு மணிமண்டபம் அமைத்திட நிதி ஒதுக்கி அவரது பெருமையைப் போற்றியது தலைவர் கலைஞரின் அரசு! வாழ்க ஒண்டிவீரனின் புகழ்! வளர்க நாட்டுப் பற்று! என பதிவிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…