டவ்-தே புயலால் கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள அபாய அளவைத் தாண்டி வெள்ளம் செல்கிறது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் டவ்-தே புயல் உருவாகி உள்ளதாகவும், அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று இரவில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரணியல் பகுதியில் அதிகபட்சமாக 28 செ.மீ. மழை பதிவானது.
தொடர்ந்து மழை பெய்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், டவ்-தே புயலால் கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள அபாய அளவைத் தாண்டி வெள்ளம் செல்கிறது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. நீர் வரத்து அதிகரிக்கலாம் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…