உச்சகட்ட பரபரப்பு…கடும் மோதல்;தடையை உடைத்து தலைமை அலுவலகம் நுழைந்த ஓபிஎஸ்!

Default Image

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு ஈபிஎஸ் சென்றுள்ளார்.

அதே சமயம்,தனது வீட்டின் முன்பு உள்ள ஏராளமான தொண்டர்கள், ஆதரவாளர்களை சந்தித்துவிட்டு,தற்போது பிரச்சார வாகனத்தில் தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வந்துள்ளார்.இதனிடையே,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.குறிப்பாக,ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதில் ஓபிஎஸ் ஆதரவாளர்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திகுத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும்,கட்டை,கம்புகள்,கற்களை எறிந்தும் இரு தரப்பினரும் கடும் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.இதனால்,மோதலை தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,ஈபிஎஸ் ஆதரவாளர்களால் பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுவலகம் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் உடைக்கப்பட்டு,ஓபிஎஸ் உள்ளே வருவதற்கான வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து,ஆதரவாளர்களுடன் கொடியை ஏந்தியவாறு தலைமை அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் சென்றுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்