தலைமறைவான பேனர் ஜெயகோபால் !தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

Default Image

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை  தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்

கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த  சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர்  மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து  சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு  பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் மீது  304(A), 279, 336 ஆகிய பிரிவுகளில் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவான 308-ன் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆனால் தற்போது வரை அவர் கைது செய்யப்படவில்லை.ஜெயகோபால் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில்  தலைமறைவான ஜெயகோபாலை திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்