பொதுப் போக்குவரத்து வாகனங்களின் அனைத்து ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதங்களில் மேற்குவங்கம் மற்றும் டெல்லி மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பு செய்து அவகாசம் வழங்கியது போல தமிழகத்திலும் பொது போக்குவரத்து வாகனங்களின் ஆவணங்கள் செயல்படும் கால அவகாசத்தை 31 டிசம்பர் வரை நீட்டிப்பு செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையினை ஏற்று கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டும், பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதியும் அனைத்து ஆவணங்களின் தகுதி சான்று புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு செல்லுபடியாகும் கால அளவினை டிசம்பர் 31-ம் தேதி வரை கால நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுவே கடைசி நீட்டிப்பாக இருக்கும் என நிபந்தனையுடன் குறிப்பிட்டு தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…