டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
தமிழகத்தில் கடந்த மாதம் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து உயர்கல்வியில் சேர சேர்வதற்காக ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இன்றுடன் டிப்ளமோ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அக பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகள் ஆகியவற்றிற்கான முதலாமாண்டு பட்டய படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு 20.07.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 16940 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
04.08.2020 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருக்க நிலையில் கூடுதல் அவகாசம் கோரி மாணவர்கள் கேட்டுக் கொண்டதை ஏற்று பட்டயப் படிப்பு (Diploma) சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 20.08.2020 வரை மேற்கொள்ளலாம் என உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…