ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு : அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

Default Image

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று 10:30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலகத்தில் இருந்து, காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில், தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில், இதுவரை தமிழகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொண்டு மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்