தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுஇருந்தது.இதனிடையே நேற்று தமிழகத்தில் மீண்டும் தனியார் மற்றும் அரசு பேருந்து சேவை 31-ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,திருச்சி- செங்கல்பட்டு, மதுரை- விழுப்புரம், கோவை- காட்பாடி ரயில்கள் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.ஏற்கனவே 15-ஆம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,நீட்டிக்கப்பட்டுள்ளது . தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரத்து செய்யப்படும் ரயில்களுக்கான கட்டணம் பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்படும் என்றும் திருச்சி- மயிலாடுதுறை, அரக்கோணம்- கோவை, கோவை- மயிலாடுதுறை, திருச்சி- நாகர்கோயில் ரயில் சேவை வரும் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…