#BreakingNews : தமிழகத்தில் செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் பழனிசாமி

Default Image

தமிழகத்தில் செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.தற்போது  நாளை வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று தெரிவித்தது. பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்தது.மேலும், செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது மத்திய அரசு.குறிப்பாக அரசின் உத்தரவு இல்லாமல் எந்த மாநிலங்களும் ஊரடங்கை அறிவிக்க கூடாது எனவும் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் தான் நாளையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று  காலை முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.பின்  மருத்துவ நிபுணர் குழுவுடன் மாலை முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டார் .இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 30 -ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துளளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்