தனது பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் ஆசிரியர் கமலவல்லி.
இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கு ஆசிரியர் கமலவள்ளி தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கருப்பம்புலம் கிராமத்தில் உள்ளது ஞானாம்பிகா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி.
இந்த பள்ளியில் 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் இரு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் கமலவல்லி, மாணவர்களின் குடும்பத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளார்.
இவர், ஒவ்வொரு மாணவரின் குடும்பத்திற்கும் ரூ.1,000 ரொக்கம் வழங்கியுள்ளார். மேலும் சிலரின் குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனத்தின் மூலமாக ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களையும் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் கமலவல்லி கூறுகையில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே அன்றாடம் வேலைக்கு சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள். தற்போது ஊரடங்கால் வறுமையில் வாடும் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய நினைத்தேன் என தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளி ஆசிரியரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிற நிலையில், இவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…