முதல்வர் உள்ளிட்ட விஐபி-க்களின் பாதுகாப்பு பணிகளுக்காக பெண் காவலர்களை சாலை ஓரம் நீண்ட நேரம் நிற்க வைக்க வேண்டாம் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தல்.
ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெண் காவலர்கள் மற்றும் வயது முதிர்ந்த காவலர்களின் பணி சுமையை குறைக்கும் விதமாக கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண் காவலர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் காவலர்களுக்கு அதிக பணிச்சுமை மற்றும் நேரடியாக களத்திற்கு சென்று பணியாற்ற கூடிய பணிகள் ஆகியவற்றை ஒதுக்க வேண்டாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுதும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என முதல்வர் முக ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிஜிபி திரிபாதி அவர்கள் முதலமைச்சர் உள்ளிட்ட விஐபி-க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கவும், சாலைகளில் நீண்ட நேரம் பெண் காவலர்களை நிற்க வைக்க வேண்டாம் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…