கீரை தண்டில் சானிடரி நாப்கின்களை தயாரித்து அசத்திய கல்லூரி மாணவர்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • புளித்த கீரையின் தண்டில் இருந்து நாரை எடுத்து நாப்கின்களை செய்து அசத்தி வருகின்றனர் கோயம்புத்தூர் பேஷன் டெக்னாலஜி மாணவர்கள் நிவேதா, கௌதம்.
  • பெண்களுக்கும், சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத இந்த நாப்கின் கண்டுபிடிப்புகளுக்காக மத்திய அரசின் பல்வேறு விருதுகளை நிவேதா, கெளதம் பெற்றுள்ளனர்.

பிளாஸ்டிக்கால் செய்யப்படும் நாப்கின்களால் உடலுக்கு கேடு என்பதால் இயற்கையை தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் புளித்த கீரையின் தண்டில் நாப்கின்களை செய்து அசத்தி வருகின்றனர் கோயம்புத்தூர் பேஷன் டெக்னாலஜி மாணவர்கள் நிவேதா, கௌதம். பெண்கள் வாழ்நாள் முழுக்க சுமார் 15,000 சானிடரி நாப்கின்களை பயன்படுத்துகிறார். இதில் பொதுவாக பெண்கள் மாதவிடா காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்களில் 80% பிளாஸ்டிக்காக இருக்கும். இதனால் ஒரு நாப்கின் முழுவதுமாக மட்க, 700 – 900 ஆண்டுகள் ஆகிறது. இப்படி பிளாஸ்டிக்கும் ரசாயனங்களும் கலந்து உருவான நாப்கின்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் புற்றுநோய் முதல் பல தொற்று நோய்கள் ஏற்பட காரணமாக இருக்கின்றது.

அந்த மாணவர்கள் கூறுகையில், நாங்கள் ஒரு ஆய்விற்காக புளித்த கீரையை விவசாயம் செய்பவர்களை சந்தித்தோம். இந்த கீரையின் இலைகள் உணவிற்கு பயன்பட்டாலும், அதன் தண்டுகள் வீணாகிப் போவதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். பேஷன் டெக்னாலஜி மாணவர்கள் என்பதால் புளிச்ச கீரை தண்டில் இருந்து நாரினை எடுத்து அதை துணியாக்கி முதலில் ஆடைகள்தான் வடிவமைத்தோம். பிறகு அந்த துணிகள் நல்ல உறிஞ்சும் சக்தியும், நுண்ணுயிரைக் கொல்லக்கூடிய திறன் இருப்பது தெரியவந்தது. அப்போதுதான், இதை ஏன் சானிட்டரி நாப்கின்களாக பயன்படுத்தக்கூடாது என்று தோன்றியது.

கல்லூரி படிப்பில் ப்ராஜெக்ட்க்காக சானிடரி நாப்கின்களை தயாரித்த இவர்கள் அதனை குடும்பத்தில் இருந்தவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் பயன்படுத்தக் கொடுத்துள்ளனர். அவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கவே, படிப்பு முடித்த கையோடு ஸ்டார்ட் அப் தொழிலாக இந்த நாப்கின் தயாரிப்பை இருவரும் கையில் எடுத்துள்ளனர். தற்போது இதற்கு இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டிலும் இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். இந்த நாப்கின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கதாகவும், உடலுக்கும் எந்த தீங்கும் வராது என உத்திரவாதம் கொடுக்கிறார்கள் அந்த மாணவர்கள்.

இந்த இயற்கை நாப்கின்கள் 4 மாதத்தில் முழுமையாக மட்கக்கூடியது. மேலும் பெண்களுக்கும், சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத இந்த நாப்கின் கண்டுபிடிப்புகளுக்காக மத்திய அரசின் பல்வேறு விருதுகளை நிவேதா, கெளதம் பெற்றுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

1 hour ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

2 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

2 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

3 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

4 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

6 hours ago