சேலம்: 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்களை அவரது அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கத்தியால் கொல்ல முயற்சி.
சேலத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்களை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி நடைபெற்றுள்ளது.இதனால்,நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்களிடையே பரபரப்பு நிலவுகிறது.
சேலத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்கள் இன்று வழக்கம்போல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்த நிலையில்,நீதிபதியை அவரது அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கத்தியால் கொல்ல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனை சுதாரித்துக் கொண்ட நீதிபதி அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.எனினும், அவருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, சிகிச்சைக்காக நீதிபதி பொன்பாண்டி அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே,அவரைக் கொலை முயன்ற பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ,அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில்,அலுவலக உதவியாளர் பிரகாஷ்-க்கு அடிக்கடி பணியிட மாறுதல் வழங்கப்பட்டநேற்று மீண்டும் சேலம் குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்த நிலையில்,தனது அதிகமான பணியிட மாற்றத்துக்கு நீதிபதி பொன்பாண்டி காரணமாக இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவரை கொலை செய்ய பிரகாஷ் முயன்றதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…