பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு..! பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்…!

Default Image

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு பிரதமருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு  அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த விலை குறைப்பு வாகனஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு பிரதமருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு பிரதமருக்கு நன்றி. இதனால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்