செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அடையாறு ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.
நிவர் புயலானது 11கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் , அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு அல்லது நாளை அதிகாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிவர் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.அவ்வாறு சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி 22 இன் அடி எட்டியதை தொடர்ந்து இன்று மதியம் 12 மணியளவில் 1000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது .
எனவே அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் சென்னை மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ள 169 நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது . சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியின் ஷட்டர்கள் திறக்கப்பட்டதால் ,அதனை காண மக்கள் அலை மோதினர் .ஆனால் புறநகர் பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கிருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டனர்.ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் அடையாறு ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
அதே போன்று அடையாறு ஆற்றின் வெள்ளமானது கோட்டூர்புரம்,சிறுகலத்தூர் , குன்றத்தூர் ஆகிய பகுதிகளை கடைந்து தான் கடலுக்குள் கலக்குகிறது.எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர் .அதே போன்று இந்த உபரிநீர் கால்வாய்கள், ஏரிகள் மற்றும் மாம்பலம், வேளச்சேரியில் உள்ள கேனல்களையும் சுத்தம் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும் நிவாரண முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைவருக்கும் முகமூடிகள் ,சானிடைசர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாவும் ,ஒரு நபருக்கு 27 பொருட்களின் பட்டியல் என்ற வீதம் தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா கூறியுள்ளார்.தற்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடும் உபரி நீரின் அளவு 3000 கன அடியாக அதிகரித்துள்ளது.
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…