செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் 2000 கன அடியாக அதிகரிப்பு.!

Published by
Ragi

தொடர் கனமழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதனால் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இன்று காலை ஏரிக்கு வரும் நீர்வரத்து 6000 கன அடியாக உயர்ந்துள்ளது.எனவே ஏரியிலிருந்து திறந்து விடும் உபரி நீரின் அளவு 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் முக்கிய நீர் ஆதாரமான ஸ்ரீபெரும்புதூர்,பிள்ளைபாக்கம் ஆகிய ஏரிகளும் ஏற்கனவே நிறைந்து விட்ட காரணத்தினால் தற்போது பெய்யும் மழையால் வரும் தண்ணீரை அப்படியே திறந்து விடப்படுகிறது .எனவே ஸ்ரீபெரும்புதூர்-குன்றுத்தூர் சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது .எனவே சாலைகள் முடப்பட்டு போக்குவரத்து வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் அடையாற்றின் கரையோரம் வெள்ளத்தில் மிதக்கிறது .இந்த நிலையில் தற்போதும் அதிக அளவு உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்பட்டு வருவதால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை கவனமாக கண்காணித்து வருகின்றனர்

Published by
Ragi

Recent Posts

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

23 minutes ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

47 minutes ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

1 hour ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

2 hours ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

3 hours ago

டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…

3 hours ago