வரும் 22ம் தேதி முதல் அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் – அண்ணா பல்கலைக்கழகம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

பொறியியல் இறுதியாண்டு தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 22-ம் தேதி முதல் ஆன்லைனில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி தேர்வு நடைபெறும். கடந்த 2008 முதல் இறுதியாண்டில் அரியர் வைத்துள்ளவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ல் செய்முறை தேர்வும் 24ல-ஆம் தேதி எழுத்துத் தேர்வும் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் செமஸ்டரில் இறுதி தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு அதே நாளில் தேர்வு நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் இறுதிப் பருவத் தேர்வுகளில் அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கு மட்டும், அரியர் தேர்வை உடனே நடத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . Terminal Semester தவிர, பிற செமஸ்டரில் அரியர் வைத்திருந்து அதற்கு கட்டணம் செலுத்தியிருப்பின், அவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் முடிவில் மாற்றம் இல்லை என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆர்சிபி சிறந்த அணி தான் ஆனா நாங்க…வருண் சக்கரவர்த்தி ஃபயர் ஸ்பீச்!

கொல்கத்தா : 18 வது சீசனுக்கான  ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …

4 hours ago

பதவிக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் அல்ல நான் – இபிஎஸ் பேச்சு!

சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…

5 hours ago

குறுக்க இந்த மழை கௌசிக் வந்தா? அபாயத்தில் முதல் ஐபிஎல் போட்டி? ஆரஞ்சு அலர்ட்!

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…

6 hours ago

ஊழலை மறைக்க மொழியின் பெயரால் அரசியல் செய்றாங்க! அமித் ஷா பேச்சு!

டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி  முதல் தொடங்கிய நிலையில், வரும்  ஏப்ரல் 6-ஆம் தேதி…

6 hours ago

ஐபிஎல் 2025 : சென்னை போட்டிக்கு டிக்கெட் வாங்குங்க…மெட்ரோவில் ஃபிரியா பயணம் பண்ணுங்க!

சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…

7 hours ago

இதுதான் அரசியல்., திமுக அழைப்பிற்கு பவன் கல்யாண் ஆதரவு! நாளை வருகை..,

சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…

7 hours ago