மீண்டும் கூடும் I.N.D.I.A தலைவர்கள்.. சென்னையில் முக்கிய விழா.. உ.பி முன்னாள் முதல்வர் வருகை.!

Published by
மணிகண்டன்

1989ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சியில் விபி சிங் பிரதமராக இருந்த போது பிற்படுத்த பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை அளித்திடும் வகையில் கொண்டுவரப்பட்ட மண்டல் கமிஷனை அமல்படுத்தினார். இதன் மூலம் தான் தற்போது வ்ரையில் சாதிவாரி இடஒதுக்கீடு என்பது அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மண்டல் கமிஷன் மூலம் சாதிவாரி இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக இந்தியாவில் அமல்படுத்திய மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்கிற்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முழு உருவ சிலையை தமிழக அரசு நிறுவியுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தொடர் மருத்துவ சிகிச்சை… இன்றாவது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா.? உச்சநீதிமன்றத்தில் விசாரணை…

இந்த சிலை திறப்பு விழாவானது வருகிற நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்புகளை முக்கிய அரசியல் தலைவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும், INDIA கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை சந்தித்து தமிழக அரசு சார்பில் திமுக எம்பி டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்தது இருந்தார்.  இதனை அடுத்து வரும் நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ள சிலை திறப்பு விழாவுக்கு அகிலேஷ் யாதவ் வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது .

நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, உள்ளிட்ட 24 கட்சிகள் உள்ள இந்தியா கூட்டணியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் முக்கிய பங்காற்றி வருகிறது. இதில், ராகுல்காந்தி முன்னெடுத்த  சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சாரத்தில் அகிலேஷ் யாதவ் உடன் படாமல் கருத்து தெரிவித்து வந்தார். இத்தனை ஆண்டுகள் காங்கிரஸ் இதனை ஏன் செய்யவில்லை என கருத்து தெரிவித்து இருந்தார். மேலும், உத்திர பிரதேச தொகுதி பங்கீடு குறிதும் காங்கிரஸ் – சமாஜ்வாடி இடையே சிறு கருத்துவேறுபாடு நிலவியது. இதனால் இந்தியா கூட்டணிக்குள் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டு விடுமோ என சிறு பதட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இருக்கிறார்கள்.

ஆரம்பம் முதலே இந்தியா கூட்டணியில் அனைவரும் ஒன்றிணைய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய பங்காற்றி வருகிறார். பெரும்பாலான இந்தியா கூட்டணி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் நட்பு பாராட்டும் வகையில் செயல்பட்டு வருகிறார். அதனால், வரும் நவம்பர்  27இல் சென்னை வரும் அகிலேஷ் யாதவிடம் இந்தியா கூட்டணி தொடர்பாகவும் , காங்கிரஸ் உடன் உடன்பாடு ஏற்படவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.

வரும் டிசம்பர் 3ஆம் தேதிக்கு பின்னர் இந்தியா கூட்டணி மட்டுமல்லாது, 2024 தேர்தல் களமே வேறு மாதிரி இருக்க கூடும் என்கிறது இந்திய அரசியல் வட்டாரம். டிசம்பர் 3ஆம் தேதியில் மத்திய பிரதேசம் , ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இதில் பெரும்பாலும் பாஜகவும் காங்கிரசும் நேரடி போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

36 minutes ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

38 minutes ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

1 hour ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

1 hour ago

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

3 hours ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

3 hours ago