அதிமுக அரசியல் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், ஓர் பெண் காவலரை ஒருமையையில் பேசி திட்டியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில், அதிமுக சார்பில் அரசியல் கூட்டம் நடைபெற்றது. அண்ணா நூற்றாண்டு விழா எனும் பெயரில் இந்த அரசியல் கூட்டம் நடைபெற்றது.
அதில் பல்வேறு அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அதில், முன்னாள் அதிமுக அமைச்சர் முல்லை வேந்தனும் கலந்து கொண்டார். அந்த விழாவில் முல்லை வேந்தன் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
அவர் பேசுகையில், ஒரு குறிப்பிட்ட பகுதியை கூறி, அந்த அப்பகுதியில் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ) இருக்கும் பெண் காவலரை குறிப்பிட்டு, ‘ ஒரு பொம்பள, அவ பண்ணி மேய்க்க கூட லாயக்கில்லை. அவ ஒரு அடங்காபிடாரி.
ஒரு பெட்டிஷனை கொடுக்க அனுமதி கேட்டால், எங்க வந்து கொடுக்குற, அங்க போய் கொடு என கூறுகிறார் , பின்னர், டி.எஸ்.பியிடம் சென்று, ‘ உங்களுக்கு கிழே இருக்குற அந்த பொம்பள ஒரு அடங்காபிடாரி தெரியுமா?” என கூறிவிட்டு வந்தேன் என கூறினார்.
முன்னாள் அமைச்சர், ஒரு பெண் காவலரை ஒருமையில் பேசி திட்டி பேசியது, அப்பகுதியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…