முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன், மகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

சொத்து குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் 2 மகன்கள், மகளுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1996 முதல் 2001 வரை கால்நடை துறை அமைச்சராக இருந்த செங்குட்டுவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல் மற்றும் மகள் மீனாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட செங்குட்டுவன், அவரது மருமகன் இறந்துவிட்டதால், மற்றவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் செங்குட்டுவனின் சகோதரர் மகள் வள்ளிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம். இதனிடையே, திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் (80) கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி காலமானார்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகிலுள்ள வேலக்குறிச்சியைச் சேர்ந்த இவர், மருங்காபுரி ஒன்றிய திமுக செயலாளராக 7 முறை பதவி வகித்தவர். மருங்காபுரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார். பின்னர், 1996-ல் மருங்காபுரி தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

2013-ல் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர் மீண்டும் திமுகவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். இந்த நிலையில், திமுக ஆட்சியில் 1996-2001 ஆம் ஆண்டில் கால்நடை துறை அமைச்சராக இருந்த செங்குட்டுவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட செங்குட்டுவன் காலமானதால், தற்போது அவரது மகன்கள், மகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“அவர் பொய் சொல்கிறார்., நாங்க அப்படி சொல்லவே இல்ல!” திட்டவட்டமாக மறுக்கும் கனிமொழி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…

6 minutes ago

“இன்னும் 10 வருஷம் இருக்கே.!” ஓய்வு குறித்த கேள்விக்கு ‘கிங்’ கோலியின் நச் ரீப்ளே!

துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…

1 hour ago

“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…

துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…

2 hours ago

நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை)  தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…

2 hours ago

“திமுக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்”… பேசிவிட்டு பின் வாங்கிய தர்மேந்திர பிரதான்!

டெல்லி :  இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…

3 hours ago

தூத்துக்குடியில் பரபரப்பு… 11ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.!

ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…

3 hours ago