முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன், மகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

சொத்து குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் 2 மகன்கள், மகளுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1996 முதல் 2001 வரை கால்நடை துறை அமைச்சராக இருந்த செங்குட்டுவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல் மற்றும் மகள் மீனாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட செங்குட்டுவன், அவரது மருமகன் இறந்துவிட்டதால், மற்றவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் செங்குட்டுவனின் சகோதரர் மகள் வள்ளிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம். இதனிடையே, திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் (80) கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி காலமானார்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகிலுள்ள வேலக்குறிச்சியைச் சேர்ந்த இவர், மருங்காபுரி ஒன்றிய திமுக செயலாளராக 7 முறை பதவி வகித்தவர். மருங்காபுரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார். பின்னர், 1996-ல் மருங்காபுரி தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

2013-ல் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர் மீண்டும் திமுகவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். இந்த நிலையில், திமுக ஆட்சியில் 1996-2001 ஆம் ஆண்டில் கால்நடை துறை அமைச்சராக இருந்த செங்குட்டுவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட செங்குட்டுவன் காலமானதால், தற்போது அவரது மகன்கள், மகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

1 minute ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

4 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

4 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

5 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

5 hours ago