நவம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவிடும். இனி தமிழகத்தில் ஊரடங்கு தேவையில்லை. அடுத்த மாதம் ( ஆகஸ்ட் ) முதல் பேருந்து, ரயில்களை இயக்கலாம். – பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தலைநகர் சென்னையில் சற்று குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் , சில நாட்களுக்கு முன்னர், புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக ‘கொரோனா தொற்று குறித்த உண்மைகள், அதன் தடுப்பு முறைகள், விழிப்புணர்வு’ என்கிற தலைப்பில் புதுசேரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி பேசுகையில், சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. மற்ற ஊர்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கிராம பகுதிகளில் குறைவான அளவே பாதிப்பு இருக்கும்.
நவம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவிடும். இனி தமிழகத்தில் ஊரடங்கு தேவையில்லை. அடுத்த மாதம் ( ஆகஸ்ட் ) முதல் பேருந்து, ரயில்களை இயக்கலாம் என அவர் தெரிவித்தார். சில மாதங்களுக்கு மட்டும் 60 வயதிற்கு மேலானோர் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், பொதுமக்கள், கட்டாய முகக்கவசம், சோப்பு போட்டு கைகழுவுதல், சமூக இடைவெளி போன்றவைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். எனவும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி தனது கருத்துக்களை தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…