ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சென்ற அவரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.169.77 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு 3 வருடத்தில் ரூ.583.45 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. ராணி பேட்டை மாவட்டத்தில் 3,350 காய்ச்சல் முகாம்கள் நடப்பட்டள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் உடனே தீர்வு காணப்படுகின்றது. மேலும் கொரோனாவை தடுக்க குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நேதாஜி மார்க்கெட் வியாபாரிகளின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு புதிய மார்க்கெட் கட்டித் தரப்படும் இதற்கிடையில் தென் பெண்ணை ஆறு மற்றும் பாலாறு இணைப்புத் திட்டம் ரூ 648 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…