இந்தி திணிப்பில் மத்திய அரசு வெறியாக உள்ளது – அமைச்சர் பொன்னையன்!

தாய் மொழியே இல்லாவிட்டாலும், இந்தி திணிப்பில் மத்திய அரசுக்கு வெறி உள்ளது என அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், முதல்வரின் தாயாருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் முதல்வரின் தாயார் மறைவுக்கு இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
இந்த கடிதத்தை இந்தியில் அவர் அனுப்பியுள்ளார், இது சர்ச்சைக்குள்ளாகியது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமித்ஷாவுக்கு இந்தி தாய்மொழி இல்லாவிட்டாலும் இந்தியில் கடிதம் எழுதுகிறார் என்றால் இந்தி திணிப்பில் மத்திய அரசு எவ்வளவு வெறித்தனமாக இருக்கிறது என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு என விளக்கம் அளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025