அரைகுறை ஆடை அணிந்திருக்கும் சாமிகளை பார்த்து தோன்றாதது, பெண்களை பார்க்கும்போது மட்டும் ஏன் தோன்றுகிறது என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவைக்கான பரப்புரையை மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் அணியும் ஆடைகள் காரணமாக்கப்படுவது தவறு என்றும் வன்கொடுமைகளுக்கு பெண்கள் அணியும் ஆடைகளை குறை சொல்வதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சாமிகூடத்தான் குறைவான ஆடை அணிந்திருக்கு, அதில் சில சாமி ஆடையில்லாமல் கூட இருக்கிறது. அப்போ தோன்றாதது, நம் சகோதிரிகளை பார்க்கும்போது மட்டும் ஏன் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசியல் விதியை பெண்கள் மட்டுமே நினைத்தாலே மாற்ற முடியும் எனவும் பேசியுள்ளார். தற்போது, கமல்ஹாசனின் சர்ச்சையான பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…