அரைகுறை ஆடை அணிந்திருக்கும் சாமிகளை பார்த்து தோன்றாதது, பெண்களை பார்க்கும்போது மட்டும் ஏன் தோன்றுகிறது என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவைக்கான பரப்புரையை மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் அணியும் ஆடைகள் காரணமாக்கப்படுவது தவறு என்றும் வன்கொடுமைகளுக்கு பெண்கள் அணியும் ஆடைகளை குறை சொல்வதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சாமிகூடத்தான் குறைவான ஆடை அணிந்திருக்கு, அதில் சில சாமி ஆடையில்லாமல் கூட இருக்கிறது. அப்போ தோன்றாதது, நம் சகோதிரிகளை பார்க்கும்போது மட்டும் ஏன் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசியல் விதியை பெண்கள் மட்டுமே நினைத்தாலே மாற்ற முடியும் எனவும் பேசியுள்ளார். தற்போது, கமல்ஹாசனின் சர்ச்சையான பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…