கருவாடு கூட ஒரு நாள் மீனாகும்…! ஆனால் சசிகலா அதிமுக உறுப்பினராக முடியாது..! -முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

Published by
லீனா
  • அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
  • கருவாடு கூட ஒரு நாள் மீனாகும், ஆனால் ஒரு நாள் கூட சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக முடியாது.

அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில், சசிகலா அவர்கள், ‘நான் விரைவில் வந்துவிடுவேன். அனைத்தையும் சரி செய்து விடலாம்.’ என தொடர்களிடம் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ‘இந்த இயக்கத்தில் சசிகலா எங்கே இருந்தார் என்பதே தெரியாது. அவருக்கும், அதிமுக-வின் சரித்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவர் ஜெயலலிதாவின் வீட்டிலே அவருக்கு உதவியாக இருந்து வந்தார். அவ்வளவு தான்.

சசிகலா இப்பொது என்ன வேஷம் போட்டாலும், என்ன நாடகம் போட்டாலும் எடுக்காது. எங்கள் மூத்தவர் கருவாடு மீன்  என்று சொன்னார். ஆனால், கருவாடு கூட ஒரு நாள் மீனாகும், ஆனால் ஒரு நாள் கூட சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக முடியாது. ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்? விமானம் மூலம் தேடுதல் வேட்டையில் இந்திய ரானுவம்!

பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்? விமானம் மூலம் தேடுதல் வேட்டையில் இந்திய ரானுவம்!

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

9 minutes ago

Live : ஜம்மு காஷ்மீர் தாக்குதல் முதல்…அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

37 minutes ago

தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரி..சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!

ஸ்ரீநகர் :  ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…

59 minutes ago

PahalgamAttack : ஜம்மு காஷ்மீர் தாக்குதல்…மனதை உலுக்கும் காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…

2 hours ago

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

3 hours ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

3 hours ago