கருவாடு கூட ஒரு நாள் மீனாகும்…! ஆனால் சசிகலா அதிமுக உறுப்பினராக முடியாது..! -முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

Default Image
  • அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
  • கருவாடு கூட ஒரு நாள் மீனாகும், ஆனால் ஒரு நாள் கூட சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக முடியாது.

அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகிவந்த நிலையில், சசிகலா அவர்கள், ‘நான் விரைவில் வந்துவிடுவேன். அனைத்தையும் சரி செய்து விடலாம்.’ என தொடர்களிடம் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ‘இந்த இயக்கத்தில் சசிகலா எங்கே இருந்தார் என்பதே தெரியாது. அவருக்கும், அதிமுக-வின் சரித்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவர் ஜெயலலிதாவின் வீட்டிலே அவருக்கு உதவியாக இருந்து வந்தார். அவ்வளவு தான்.

சசிகலா இப்பொது என்ன வேஷம் போட்டாலும், என்ன நாடகம் போட்டாலும் எடுக்காது. எங்கள் மூத்தவர் கருவாடு மீன்  என்று சொன்னார். ஆனால், கருவாடு கூட ஒரு நாள் மீனாகும், ஆனால் ஒரு நாள் கூட சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக முடியாது. ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்