பெண்களை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்லுவதற்கு பிரதமர் மோடிக்கு கூட அருகதை கிடையாது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நிருபர்கள் அவரிடம், திமுக பெண்களை இழிவுபடுத்துவதாக கூறி பாஜக கட்சியினர் வாக்கு சேகரிக்கிறார்கள். இது உங்களது உங்களுடைய கூட்டணியின் வாக்கு சதவிகிதத்தை பாதிக்கும் என நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர், பாஜக எப்போதுமே மக்களுடைய பிரச்சனைகள், அவர்களுடைய தேவைகள் குறித்து பேசுவதில்லை. எது உணர்ச்சிபூர்வமான பிரச்சனையோ அதை தான், கையிலெடுத்து வாக்கு வங்கியாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். பெண்களை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்லுவதற்கு பிரதமர் மோடிக்கு கூட அருகதை கிடையாது.
பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் என்னு கூறி, அரசியல் ஆதாயம் தேட விரும்புகிறார்கள். இந்த அரசியல் யுக்தி தமிழ்நாட்டில் எடுபடாது என்றும், சாதி மாறும் மதத்தின் பெயரால், பாஜக தமிழகத்தை கூறு போட பார்க்கிறது என்றும், திமுக கூட்டணி சமூக நீதிக்கானது, ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கோடுதான் இந்த கூட்டணியை கட்டமைத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…