20 தொகுதிகளில் இடைத்தேர்தல் தனித்து நடந்தாலும், மக்களவை தேர்தலோடு நடந்தாலும் அதிமுக வெற்றி பெறும் …!அமைச்சர் கடம்பூர் ராஜூ

Default Image

மூன்றாவது நீதிபதி தீர்ப்பை வரவேற்கிறேன் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.
இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக  அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மூன்றாவது நீதிபதி தீர்ப்பை வரவேற்கிறேன்.ஜெயலலிதா ஆன்மாவின் துணையுடன் அதிமுக ஆட்சி நீடித்து நிற்கும், எந்த தேர்தலையும் சந்திக்க தயார். 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் தனித்து நடந்தாலும், மக்களவை தேர்தலோடு நடந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்றும்  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்