துணை முதல்வர் பேச்சுகள்., முதலமைச்சரின் சூசகமான பதில்.! “நான் அமெரிக்கா சென்றாலும்…,”

Published by
மணிகண்டன்

சென்னை : நான் அமெரிக்கா சென்றாலும் கட்சியையும்,  ஆட்சியையும் நான் கவனித்துக் கொண்டிருப்பேன் என இன்றைய தினம் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திமுக தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் கட்சியில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறார். அவரை துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என திமுக கட்சியில் குரல்கள் வலுத்து வருகிறது.

இது குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூட பொது மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். பல்வேறு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.

இப்படியான சூழலில், இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களைக் கூறினார். அப்போது அவர் பேசுகையில், ” முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றாலும் கட்சியையும், ஆட்சியையும் நான் கவனித்துக் கொள்வேன்.” எனக்கூறி, துணை முதல்வர் பேச்சுகளுக்கு மறைமுகமாகப் பதில் அளித்தார் என்றே அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முன்னதாக இன்றைய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் துணை முதல்வர் கோரிக்கைகளை முன்வைப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. மேலும், வரும் 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்ல உள்ளதால் இன்று துணை முதல்வர் பற்றிய ஆலோசனை இருக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

துணை முதலமைச்சர் கேள்வி குறித்து அமைச்சர் உதயநிதி ஒரு நிகழ்வில் பேசுகையில், முதலமைச்சருக்குத் துணையாக நாங்கள் அனைவரும் செயல்பட்டு வருகிறோம் எனப் பேசினார். இதே துணை முதல்வர் பற்றிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமுறை செய்தியாளர்களின் பேசுகையில், “துணை முதல்வர் கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இன்னும் பழுக்கவில்லை.” என அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி பேசியிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Published by
மணிகண்டன்

Recent Posts

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

9 minutes ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

11 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

11 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

16 hours ago