துணை முதல்வர் பேச்சுகள்., முதலமைச்சரின் சூசகமான பதில்.! “நான் அமெரிக்கா சென்றாலும்…,”

Published by
மணிகண்டன்

சென்னை : நான் அமெரிக்கா சென்றாலும் கட்சியையும்,  ஆட்சியையும் நான் கவனித்துக் கொண்டிருப்பேன் என இன்றைய தினம் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திமுக தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் கட்சியில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறார். அவரை துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என திமுக கட்சியில் குரல்கள் வலுத்து வருகிறது.

இது குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூட பொது மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். பல்வேறு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.

இப்படியான சூழலில், இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களைக் கூறினார். அப்போது அவர் பேசுகையில், ” முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றாலும் கட்சியையும், ஆட்சியையும் நான் கவனித்துக் கொள்வேன்.” எனக்கூறி, துணை முதல்வர் பேச்சுகளுக்கு மறைமுகமாகப் பதில் அளித்தார் என்றே அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முன்னதாக இன்றைய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் துணை முதல்வர் கோரிக்கைகளை முன்வைப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. மேலும், வரும் 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்ல உள்ளதால் இன்று துணை முதல்வர் பற்றிய ஆலோசனை இருக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

துணை முதலமைச்சர் கேள்வி குறித்து அமைச்சர் உதயநிதி ஒரு நிகழ்வில் பேசுகையில், முதலமைச்சருக்குத் துணையாக நாங்கள் அனைவரும் செயல்பட்டு வருகிறோம் எனப் பேசினார். இதே துணை முதல்வர் பற்றிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமுறை செய்தியாளர்களின் பேசுகையில், “துணை முதல்வர் கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இன்னும் பழுக்கவில்லை.” என அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி பேசியிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago