ஈரோடு, நீலகிரியை தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்தது கரூர்.!

Published by
மணிகண்டன்
கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று சிகிச்சையிலிருந்து பூரண குணமடைந்த கடைசி நபரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழியனுப்பி வைத்தார்.
கொரோனா தொற்று காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் கொரோனா சிகிச்சை பெற்று வந்தனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்கனவே 41 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். தற்போது, கடைசி நபரும் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
குணமடைந்த நபரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மருத்துவமனையில் இருந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். மேலும், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  முதல்வர் ரோஸி வெண்ணிலா தலைமையிலான மருத்துவ குழுவிற்கும், தூய்மை பணியாளர்களுக்கும் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சருடன், கரூர் மாவட்ட ஆட்சியர்  அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாண்டியராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் மாவட்டமானது நீலகிரி, ஈரோடை போலவே கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக உருவெடுத்துள்ளது.
தற்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 6 நபர்களும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 நபர்களும் கொரோனா சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Published by
மணிகண்டன்

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

17 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago