ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி காலமானார்!

Published by
பாலா கலியமூர்த்தி

Ganesha Moorthy: மதிமுகவை சேர்ந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (வயது 77) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.

மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கணேச மூர்த்தி 3வது முறை எம்பியாக இருந்து வந்த நிலையில், ஈரோடு எம்பியாக 2 முறை தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேசமூர்த்தி சிட்டிங் எம்பியாக இருந்து வந்தார்.

இந்த சூழலில் வரும் மக்களவை தேர்தலில் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 24ம் தேதி திடீரென கணேசமூர்த்தி எம்பி தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டது.

கணேச மூர்த்தியின் இந்த செயல் மதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த சில நாட்களாக கணேச மூர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனிடையே ஈரோடு எம்பி கணேச மூர்த்தியின் உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (வயது 77) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடல்நல குறைவால் சிகிச்சைபெற்று வந்த கணேசமூர்த்தி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். மதிமுக எம்.பி. கணேச மூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 5 மணியளவில் சொந்த ஊரான குமாரவலசு பகுதியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மதிமுக எம்பி கணேசமூர்த்தி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கணேச மூர்த்தி 1947-ல் குமாரவலசு பகுதியில் பிறந்தவர். கடந்த 1978 – திமுக மாணவரணி பொறுப்பாளர் பதவி வகித்தி அவர், 1989ம் ஆண்டு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். 1993 ல் திமுக ஈரோடு மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்தார்.

இதன்பின் 1993ல் வைகோவுடன் மதிமுகவில் இணைந்த அவர், 1998ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பழநி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதைத்தொடர்ந்து தொடர்ந்து 2009, 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

22 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

26 mins ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

26 mins ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

1 hour ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

1 hour ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

2 hours ago