ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா போட்டியிடுவார் என நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு.
திருமகன் ஈவேரா மறைவையடுத்து, வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள சீமான் அவர்கள், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா போட்டியிடுவார். மொழி பற்று, இனப்பற்று கொண்டவர். அதனால் தான் இந்த வாய்ப்பை இவருக்கு வழங்கியுள்ளோம்.
எங்களுக்கு எங்களுடைய பலம் என்ன என்று தெரியும் அந்த வகையில் இவர் கடுமையான உழைப்பை கொண்டவர் என தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், இத்தொகுதியில் நாதக வேட்பாளர் 11,629 வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…